×

ஜெயங்கொண்டம் அருகே வயலில் இறந்து கிடந்த மயில்

 

ஜெயங்கொண்டம், ஏப்.26: ஜெயங்கொண்டம் அரு கே உள்ள வீரபோகம் கிராமத்தைச் சேர்ந்த லட்சுமணன் என்பவருக்கு சொந்தமான வயல் உள்ளது. நேற்று காலை வயலில் வேலை செய்வதற்காக பணியாளர்கள் சென்றனர். அப்போது வயலில் மயில் ஒன்று இறந்து கிடந்தது. இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல்அறிந்த அரியலூர் வனத்துறையினர் லட்சுமணனின் வயலுக்கு சென்று ‘இறந்த மயிலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக எடுத்து சென்றனர்.

மேலும் மயில் எப்படி இறந்தது என்பது குறித்து விசாரித்து வருகின்றனர். இதுபோல்- தொடர்ந்து அந்த பகுதியில் மர்மமான முறையில் மயில் – இறந்து கிடப்பதாக அந்த பகுதி மக்கள் தெரிவித்தனர். தண்ணீர் இன்றி வறண்டு மயில்கள் இறந்து வருகின்றனவா, அல்லது வயலில் பயிர்களை தின்பதால் பயிர்களில் யாராவது விஷம் ஏற்றி விடுவதால் மயில்கள் இறந்து வருகின்றனவா என அதிகாரிகள் விசாரணை செய்து வருகின்றனர்.

The post ஜெயங்கொண்டம் அருகே வயலில் இறந்து கிடந்த மயில் appeared first on Dinakaran.

Tags : Peacock ,Jayangondam ,Lakshmanan ,Veerapogam ,Jeyangondam ,Dinakaran ,
× RELATED ஜெயங்கொண்டம் அருகே பெண் குளிக்கும்...