×

(தி.மலை) பள்ளி மாணவர்கள் மஞ்சள் பை விழிப்புணர்வு ஊர்வலம் ெபோளூர் அருகே திருமலை கிராமத்தில் படம் உண்டு

போளூர், பிப்.9: திருமலை ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளி மாணவர்களின் மஞ்சள் பை விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. தமிழகத்தில் மஞ்சள் பை பயன்படுத்த அரசு ஊக்குவித்து வருகிறது. அதன்படி, திருவண்ணாமலை மாவட்டம், போளூர் வட்டம், சேத்துப்பட்டு ஒன்றியம், திருமலை ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளி சார்பில் ‘மீண்டும் மஞ்சள் பை’ விழிப்புணர்வு நேற்று நடைபெற்றது. மாணவர்கள் நடத்திய ஊர்வலத்தில் ‘கையில் எடுப்போம் மஞ்சப்பை, கை விடுவோம் நெகிழிப்பையை’ என்ற தெருமுனை பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது.

நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியர் கவிஞர் கா.அமீர்ராஜ் தலைமை தாங்கினார். மாணவர்கள் கிராம பகுதியில் அனைத்து தெருக்களுக்கும் ஊர்வலமாக சென்று பொதுமக்களிடம் பிளாஸ்டிக்கை ஒழிக்க வேண்டும். மஞ்சள் பை உபயோகிக்க வேண்டும் என்று விளக்கி மஞ்சள் பை வழங்கினர். உதவி ஆசிரியர் சு.சண்முகம் மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டனர். கேப்சன்போளூர் அடுத்த திருமலை தொடக்க பள்ளி மாணவர்கள் மஞ்சள் பை உபயோகிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

Tags : Thimalai ,Thirumalai village ,Polur ,
× RELATED குழந்தை இல்லாததால் குடும்பத்தில்...