×

நெல்கொள்முதல் நிலையத்தில் கோட்டாட்சியர் திடீர் ஆய்வு

முஷ்ணம், பிப். 8: முஷ்ணம் அருகே கானூர் பகுதிக்கு ஆதரவற்றோர் குறித்து சிதம்பரம் கோட்டாட்சியர் ரவி விசாரணை மேற்கொண்டார். இதனையடுத்து முஷ்ணம் எம்.ஜி.ஆர் நகர் மலைக்குறவர் இனச்சான்று மற்றும் ஆதரவற்றோர் குறித்து விசாரணை மேற்கொண்டார். பின்னர் முஷ்ணத்தில் உள்ள நெல்கொள்முதல் நிலையத்தில் உள்ள நெல்மூட்டை எடை சரியாக உள்ளதா என ஆய்வு செய்தும். பின்னர் விவசாயிகளிடம் குறைகளை கேட்டறிந்தார்.  மேலும் கோப்புகள் முறையாக பராமரிக்கப்படுகிறதா என ஆய்வு செய்தார். இதனையடுத்து முஷ்ணத்தில் உள்ள நியாயவிலை கடையில் ஆய்வு மேற்கொண்டார். இந்நிகழ்ச்சியின் போது முஷ்ணம் வருவாய் ஆய்வாளர் சீதாராமன், கிராம நிர்வாக அலுவலர் செல்வகுமார் ஆகியோர் உடன் இருந்தனர்.

Tags : Kottachiyar ,Paddy Procurement Station ,
× RELATED செங்கல்பட்டு மாவட்டம் லத்தூர்...