×

ஆவடி, திருநின்றவூரில் பறக்கும்படை அதிகாரிகள் நியமனம்

ஆவடி: ஆவடி மாநகராட்சியில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப்பொருட்கள் பட்டுவாடாவை தடுக்கும் வகையில்  பறக்கும்படை குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. அதன்படி பூந்தமல்லி பகுதி சிஎம்டிஏ அதிகாரியாக கே.செந்தில்குமார், ஆவடி சிறப்பு தாசில்தார் ஆர்.முருகானந்தம், வில்லிவாக்கம் ஒன்றிய துணை வட்டார வளர்ச்சி அதிகாரி எஸ்.ஜான் மேரி, பூந்தமல்லி துணை வட்டார வளர்ச்சி அதிகாரி வி.வரபிரசாத், மீஞ்சூர் துணை வட்டார வளர்ச்சி அதிகாரி எஸ்.அருள், சோழவரம் துணை வட்டார வளர்ச்சி அதிகாரி என்.சாந்தினி ஆகிய 6 பேர் நியமிக்கப்பட்டனர். இவர்களுக்கு உறுதுணையாக போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர். இதேபோல், திருநின்றவூர் நகராட்சியில் துணை தாசில்தார்கள் கே.எஸ்.ஜெகதீசன், டி.ராஜேந்திரன், எம்.காயத்திரி ஆகியோர் நியமிக்கப்படுள்ளனர். இவர்களுக்கு உறுதுணையாக போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.

Tags : Avadi ,Thiruninravur ,
× RELATED வாகன ஓட்டிகள் அவதி மொபட்டில் இருந்து விழுந்து வாட்ச்மேன் உயிரிழப்பு