×

ஊட்டி - காந்தல் சாலையில் நிழற்குடை அமைக்க கோரிக்கை

ஊட்டி: காந்தல், படகு இல்லம், தீட்டுக்கல் பகுதிக்கு செல்லும் மக்கள் பயணிகள் நலன் கருதி மத்திய பஸ் நிலையம் அருகே நிழற்குடை அமைக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. காந்தல் பகுதியில் சுமார் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இவர்கள் தங்களது அன்றாட தேவைகளுக்கு தினமும் ஊட்டி நகருக்கு வந்து செல்கின்றனர். இவர்கள் அனைவரும் பஸ்சிற்காக ரயில் நிலைய நுழைவுவாயில் எதிரே உள்ள சாலையில் காத்திருக்க வேண்டியுள்ளது.

இப்பகுதியில் நிழற்குடைகள் ஏதும் இல்லாத நிலையில், வெயில் மற்றும் மழைக் காலத்தில் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகின்றனர். மாணவர்கள் மற்றும் சுற்றுலா பயணிகளும் பாதிக்கின்றனர். பொதுமக்கள் நலன் கருதி ஊட்டி - காந்தல் சாலையில் மத்திய பஸ் நிலையம் அருகே ஒரு நிழற்குடை அமைத்து தர வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

தற்போது இந்த இடத்தில் தனியார் வாகனங்கள் நிறுத்தப்பட்டு வருகின்றன. இதனால், பொதுமக்கள் அங்கு நிற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, இப்பகுதியில் உள்ள வாகனங்களை அப்புறப்படுத்தி நகராட்சி நிர்வாகம் நிழற்குடை அமைத்து தர வேண்டும் என பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Kandal Road ,
× RELATED காந்தல் சாலையில் நிழற்குடை அமைக்க வலியுறுத்தல்