×

திருவண்ணாமலை மாவட்டத்தில் 8 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இறுதி வாக்காளர் பட்டியல் கலெக்டர் முருகேஷ் வெளியிட்டார் \

திருவண்ணாமலை, ஜன.6: திருவண்ணாமலை மாவட்டத்தில், 8 சட்டமன்ற ெதாகுதிகளுக்கான இறுதி வாக்காளர் பட்டியலை கலெக்டர் முருகேஷ் நேற்று வெளியிட்டார். அதில், 21.01 லட்சம் வாக்காளர்கள் இடம் பெற்றுள்ளனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 8 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான 2022ம் ஆண்டுக்கான இறுதி வாக்காளர் பட்டியலை, கலெக்டர் அலுவலகத்தில் நேற்று அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் கலெக்டர் பா.முருகேஷ் வெளியிட்டார். அதனை, டிஆர்ஓ பிரியதர்ஷினி பெற்றுக்கொண்டார்.  திருவண்ணாமலை மாவட்ட வரைவு வாக்காளர் பட்டியலில், 10,27,340 ஆண்கள், 10,74,089 பெண்கள், 101 திருங்கைகள் உள்பட 21,01,530 வாக்காளர்கள் இடம் பெற்றுள்ளனர். கடந்த 1.11.2021 முதல் 30.11.2021 வரை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 51,558 விண்ணப்பங்கள் பெறப்பட்டன. அதில், 33,270 பேர் வாக்காளர் பட்டியலில் புதியதாக சேர்க்கப்பட்டுள்ளனர். மேலும், இறந்தோர் மற்றும் இடம்பெயர்ந்தோர் என கண்டறியப்பட்ட 8,938 பேர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். வரைவு வாக்காளர் பட்டியலில், தங்களுடைய பெயர் இடம் பெற்றிருக்கிறதா என்பதை பொதுமக்கள் சரிபார்க்கலாம். அதையொட்டி, அனைத்து தாலுகா அலுவலகங்கள், கோட்டாட்சியர் அலுவலகம், நகராட்சி அலுவலகம் ஆகிய இடங்களில் வாக்காளர் பட்டியல் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. மேலும், தேர்தல் ஆணையத்தின் இணையதள முகவரியிலும் பட்டியலை பார்வையிடலாம். மேலும், கடந்த 1.1.2004 வரை பிறந்தவர்கள் புதியதாக பெயர் சேர்க்க படிவம் 6ஐ அளித்து விண்ணப்பிக்கலாம். இந்நிலையில், வரும் 25ம் தேதி தேசிய வாக்காளர் தினம் மாவட்டம் முழுவதும் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட வாக்குச்சாவடி மையங்களில் கொண்டாட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Tags : Collector ,Murugesh ,Thiruvannamalai district ,
× RELATED குழந்தை திருமணங்களை தடுக்க ஆய்வு கூட்டம்