×

காட்டுமன்னார்கோவில் பகுதியில் 2 ஆயிரம் ஏக்கர் சம்பா பயிர்கள் நீரில் மூழ்கி நாசம்


காட்டுமன்னார்கோவில், ஜன. 3: காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள எடையார், பிள்ளையார்தாங்கல், திருநாரையூர், வவ்வால்தோப்பு உள்ளிட்ட பகுதிகளில் அறுவடைக்கு தயாராக இருந்த 2000 ஏக்கருக்கும் மேற்பட்ட சம்பா சாகுபடி பயிர்கள் மழை நீரில் மூழ்கி சேதமடைந்துள்ளது. இதனால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். இப்பகுதியில் உள்ள 1000 ஏக்கருக்கு மேற்பட்ட சம்பா பயிர்கள் புகையான் நோயால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், திடீரென கடந்த 2 நாட்களாக பெய்த கனமழையால், சுமார் 2000 ஏக்கருக்கு மேற்பட்ட  பயிர்களை மழைநீர் மூழ்கடித்துள்ளது. பாதிப்புக்குள்ளான பகுதிகளை அதிகாரிகள் ஆய்வு செய்து விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும். மேலும் உடனடியாக நெல் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும். விவசாய நிலத்தில் தேங்கிய தண்ணீரை வெளியேற்ற வடிகால் வசதி செய்து தர வேண்டும், என விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.

Tags : Kattumannarkovil ,
× RELATED சிதம்பரம் தொகுதி அதிமுக வேட்பாளர்...