×

பட்டா வழங்க கோரி ஆர்ப்பாட்டம்

திட்டக்குடி, டிச. 31: திட்டக்குடி தாலுகா அலுவலகம் முன், இந்திய புரட்சிகர மார்க்ஸ்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நாவலூர் கிராமத்தில் அருந்ததியர் மக்கள் சுமார் 50 ஆண்டுகளாக குடிசை போட்டு வசித்து வருகிறார்கள். இவர்களது குடிசைகளை இடிக்க சொல்லி மிரட்டி வரும் நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இப்பகுதி மக்களுக்கு பட்டா வழங்க வேண்டும். அருந்ததியர் மக்களுக்கு மண் சாலையை, சிமெண்ட் சாலையாக அமைத்து தர வேண்டும், உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.ஆர்ப்பாட்டத்துக்கு கிளை செயலாளர் மணிகண்டன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் கோகுலகிறிஸ்டீபன், வட்ட தலைவர் மும்மூர்த்தி, வட்ட குழு பானுமதி, கார்த்திராஜா, வட்ட செயலாளர் பாண்டியன், இளையராஜா, வேல்முருகன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Tags :
× RELATED பாலியல் பலாத்காரம் செய்து சிறுமியை கொன்ற வாலிபருக்கு ஆயுள் தண்டனை