×

செங்கால் ஓடையில் பாலம் அமைக்க வேண்டும்

கடலூர், டிச. 24: கடலூர் ஊராட்சி ஒன்றிய குழு 11வது வார்டு மாவட்ட கவுன்சிலர் சித்ரா ராமையன், மாவட்ட ஆட்சியர் பாலசுப்ரமணியத்திடம் அளித்த கோரிக்கை மனுவில், கடலூர் மாவட்ட ஊராட்சி ஒன்றிய குழுவின் 11வது வார்டுக்கு உட்பட்ட தம்பிப்பேட்டை ஊராட்சியில் தம்பிப்பேட்டை காலனி, பேய்காநத்தம் இணைப்பு சாலையில் செங்கால் ஓடையில் பாலம் கட்டித்தர வேண்டி பலமுறை மாவட்ட ஊராட்சி குழு கூட்டத்தில் வலியுறுத்தியுள்ளேன். கடந்த சில நாட்களாக பருவமழை பெய்த போது ஓடையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு 100க்கும் மேற்பட்ட குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்தது.
இது குறித்து அரசு கவனத்திற்கு கொண்டு வந்தோம்.இனிவரும் எதிர்காலங்களில் இந்த ஆண்டு நடந்ததுபோல் எந்த ஆண்டும் நடைபெறாமல் இருக்க வேண்டுமென்றால் சம்மந்தப்பட்ட ஓடையில் பாலம் அவசியம் கட்டித்தரவேண்டும். மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு செய்து பாலம் கட்டித்தர வேண்டும். இதன் மூலம் இரு பகுதிகளிலும் சுமார் 500 குடும்பங்களுக்கு மேல் பயன்பெறுவர், என தெரிவித்துள்ளார்.

Tags : Sengal stream ,
× RELATED பாலியல் பலாத்காரம் செய்து சிறுமியை கொன்ற வாலிபருக்கு ஆயுள் தண்டனை