×

மயானத்திற்கு பாதை இல்லாததால் சத்திரப்பட்டி குளக்கரையில் உடல் தகனம்

கந்தர்வகோட்டை, டிச.23: மயானத்திற்கு செல்ல பாதை இல்லாததால் சத்திரப்பட்டி குளக்கரையில் வைத்து உடல் தகனம் செய்த அவல நிலை ஏற்பட்டது. புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஊராட்சி ஒன்றியம் கல்லாக்கோட்டை ஊராட்சியில் உள்ள சத்திரப்பட்டியில் ஆதிதிராவிடர் தெருவில் வசிக்கும் வேம்பையன் தாயார் வயது முதிர்வு காரணமாக இருந்துள்ளார். இவரது உடலை தகனம் செய்ய அவர்களுக்கான மயானத்திற்கு செல்ல சரியான பாதை இல்லாததால் அருகில் உள்ள குளக்கரையில் உடல் தகனம் செய்துள்ளனர். இதனால் வாய்மடை கொல்லையை சேர்ந்த செல்லத்துரை மற்றும் ஊர் பொதுமக்கள் புதுக்கோட்டை மாவட்ட கலெக்டரிடம் மக்கள் குறைதீர்க்கும் தினத்தன்று இதுகுறித்து மனு அளித்து தகனம் செய்த இடத்தை சுத்தம் செய்து தரும்படியும், வரும் காலங்களில் அவர்களுக்கு உரிய மயானத்தில் உடல் தகனம் செய்ய வேண்டும் என குறிப்பிட்டிருந்தனர். இதன் விவரம் அறிந்த கந்தர்வக்கோட்டை தாசில்தார் புவியரசன் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று பார்வையிட்டு 28ம் தேதி (செவ்வாய்க்கிழமை) தாசில்தார் அலுவலகத்தில் அனைவரையும் நேரில் வரச்சொல்லி மயானத்திற்கு பாதை செய்து தர ஆலோசனை செய்ய உள்ளார்.

Tags : Chattrapathi pool ,
× RELATED கடவூர், தோகைமலை பகுதியில் கம்பு சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம்