×

பேரணாம்பட்டு அருகே விவசாய நிலத்தில் 7 அடி நீளம் மலைப்பாம்பு மீட்பு

குடியாத்தம், டிச.21: பேரணாம்பட்டு அருகே விவசாய நிலத்தில் 7 அடி மலைப்பாம்பு மீட்கப்பட்டது. பேரணாம்பட்டு அடுத்த பாலூர் கிராமத்தில் தேவராஜ் என்பவர் தனக்கு சொந்தமான விவசாய நிலத்தில் நேற்று கால்வாய் சீரமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அங்கு மலைப்பாம்பு பதுங்கி இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து அவர், பேரணாம்பட்டு வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் விவசாய நிலத்தில் பதுங்கி இருந்த 7 அடி நீளம் கொண்ட மலைப்பாம்பை, பொதுமக்கள் உதவியுடன் சுமார் அரை மணி நேரம் போராடி மீட்டனர். பின்னர், அதனை பேரணாம்பட்டு வனப்பகுதியில் கொண்டு சென்று விட்டனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags : Peranampattu ,
× RELATED வேனுடன் 210 கிலோ கடத்தல் ரேஷன் அரிசி,...