கரூர், டிச. 10: கரூர் தாந்தோணிமலை பாலாஜி நகரில் சூழ்ந்துள்ள மழைநீரை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.கரூர் மாநகராட்சிக்குட்பட்ட தாந்தோணிமலையில் பாலாஜி நகர் உள்ளது. நூற்றுக்கணக்கான குடியிருப்புகள் இந்த பகுதியில் உள்ளன. கடந்த சில நாட்களாக பெய்த தொடர்மழையின் காரணமாக பாலாஜி நகரின் நுழைவு வாயில் பகுதியில் அதிகளவு தண்ணீர் தேங்கியுள்ளது.இதன் காரணமாக இந்த பகுதியினர் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர். மேலும், கொசுக்களின் வளர்ச்சிக்கும் இந்த தண்ணீர் தேக்கம் வழிவகுக்கும் என கூறப்படுகிறது.எனவே, பாலாஜி நகரில் தேங்கியுள்ள மழைநீரை அகற்ற தேவையான ஏற்பாடுகளை அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும் என இந்த பகுதியினர் எதிர்பார்ப்பில் உள்ளனர்.