×

இலவச வீட்டு மனை வழங்ககோரி பவித்திரத்தில் மா.கம்யூ. கட்சியினர் ஆர்ப்பாட்டம்

க.பரமத்தி, டிச. 2: பவித்திரம் கிராமத்தில் வீட்டு மனை இல்லாத குடும்பங்களுக்கு அரசு வழங்கும் இலவச வீட்டு மனை வழங்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
க,பரமத்தி ஒன்றியம் பவித்திரம் கிராமத்தில் வீட்டு மனை இல்லாத குடும்பங்களுக்கு அரசு வழங்கும் இலவச வீட்டு மனை வழங்க வேண்டுமெனவும், அரசின் ஜமாபந்தி மற்றும் குறைதீர்க்கும் கூட்டத்தில நாளில் பட்டா கேட்டு விண்ணப்பித்தவர்களுக்கு உடனடியாக பட்டா வழங்க வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் பவித்திரம் கிராம நிர்வாக அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு க.பரமத்தி ஒன்றிய செயலாளர் ராமசாமி தலைமை வகித்தார். மாவட்ட குழு உறுப்பினர் கிருஷ்ணமூர்த்தி, கட்டுமான சங்க மாவட்ட துணை தலைவர் கந்தசாமி ஆகியோர் முன்னிலை வகித்து பேசினர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் முருகேசன் சிறப்புரையாற்றினார். இதில் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பல்வேறு கோஷங்களை எழுப்பினர்.

Tags : Ma.Com ,
× RELATED கூட்டுறவு வங்கி முறைகேடு; சி.பி.சி.ஐ.டி. விசாரணை தேவை: மா.கம்யூ வலியுறுத்தல்