×

சங்கராபுரத்தில் கவிஞர் சங்கை வேலவன் உடல் நல்லடக்கம்

சின்னமனூர், டிச. 2:சின்னமனூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள சங்கராபுரத்தை சேர்ந்தவர் வேலுச்சாமி (72). இவர் கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்பாக சென்னை சைதாப்பேட்டை மாநகராட்சி பள்ளியில் ஆசிரியராக வேலை செய்து வந்தார். இவர், பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரனார், உடுமலை நாராயண கவி, கவிஞர் புலமைபித்தன் ஆகியோர் பாடல்களை ஆய்வு செய்து தொகுப்பாக சங்கை கவிஞர் வேலவன் என்று பெயரில் வெளியிட்டுள்ளார். இயக்குனர் கங்கை அமரன் உள்ளிட்டோரிடம் பல ஆண்டுகளாக பணிபுரிந்து சினிமா பாடல்களும் எழுதியுள்ளார். இசைஞானி இளையராஜாவின் நெருங்கிய தொடர்பில் சினிமா பாடல்கள் மற்றும் அவரது அண்ணன் பாவலர் வரதராஜன் கம்யூனிஸ்ட் சார்ந்த பல பாடல்களை பாடியுள்ளார். இவர் வயது முதிர்வின் காரணமாக கடந்த வாரம் சொந்த ஊரான சங்கராபுரம் வந்துள்ளார். உடல் நலக்குறைவின் காரணமாக மதுரையில் சிகிச்சைக்கு சென்ற அவர் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளார். இந்நிலையில் நேற்று சங்கராபுரத்தில், அவரின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. இவரது தம்பிகள் பழனிச்சாமி, முத்தையா ஆகியோர் அண்ணனின் உடல் நல்லடக்கத்திற்கு  ஏற்பாடு செய்தனர். அரசியல்வாதிகள் மற்றும் பொதுமக்கள் இறுதி மரியாதை செலுத்தினர்.

Tags : Poet Sangai Velavan ,Sankarapuram ,
× RELATED வீட்டின் கூரையில் கொய்யா மரம்...