ஆத்தூர், ஏப்.4: ஆத்தூரில் பெண்களை விபசாரத்தில் ஈடுபடுத்திய மந்தைவெளி பகுதியைச் சேர்ந்த மணிமாறன்(32) என்பவரை ஆத்தூர் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் உமா சங்கர், கடந்த வருடம் கைது செய்தனர். அதன்பிறகு கடந்த மாதம் மீண்டும் விபசார வழக்கில் கைது செய்யப்பட்ட மணிமாறன் போலீஸ் பிடியில் இருந்து தப்பினார். தொடர்ந்து 19.03.21 அன்று மீண்டும் கைது செய்யப்பட்டு சேலம் மத்திய சிறையிலடைக்கப்பட்டுள்ளார்.
இவர் மீது பல்வேறு வழக்கு உள்ளதால் ஆத்தூர் டிஎஸ்பி இம்மானுவேல் ஞானசேகரன், குண்டாஸ் வழக்கு பதிவு செய்ய, சேலம் மாவட்ட எஸ்பி தீபா கனிக்கருக்கு பரிந்துரைத்தார். அவர், மாவட்ட கலெக்டர் ராமனுக்கு பரிந்துரை செய்தார். இதன்பேரில், அவர் மணிமாறனை குண்டாசில் கைது செய்ய உத்தரவிட்டார். இதனையடுத்து மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள மணிமாறனிடம் குண்டாசில் அடைக்க உத்தரவு வழங்கப்பட்டது.