×

தேர்தல் அமைதியாக நடக்க ஒத்துழைப்பு வழங்க வேண்டும் பார்வையாளர் வேண்டுகோள்

பட்டுக்கோட்டை, மார்ச் 23: பட்டுக்கோட்டை சப்-கலெக்டர் அலுவலகத்தில் பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதியின் அங்கீகரிக்கப்பட்ட கட்சி முகவர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் நடந்தது.

கூட்டத்திற்கு பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதி தேர்தல் பொது பார்வையாளர் அசோக்குமார் சவுஹான் தலைமை வகித்து அங்கீகரிக்கப்பட்ட கட்சி பிரதிநிதிகளிடம் பேசுகையில், தேர்தல் அமைதியாகவும், வெளிப்படைத் தன்மையுடனும், எவ்வித பாகுபாடுகளுக்கும் இடமளிக்காமலும் நடைபெற முழு ஒத்துழைப்பு நல்கிட வேண்டும். மேலும் பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் பதற்றமான வாக்குச்சாவடிகளாக உள்ள வாக்குச்சாவடிகளின் பெயர் மற்றும் விவரத்தினை தேர்தல் அலுவலகத்தில் அளிக்கலாம். ஏதேனும் குறைபாடுகள் இருப்பின் எப்போது வேண்டுமானாலும் தொலைபேசியில் தொடர்பு கொள்ளலாம் என்றார். கூட்டத்தில் பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் பாலச்சந்தர், தேர்தல் துணை வட்டாட்சியர் தர்மேந்திரா மற்றும் அனைத்து வருவாய்த்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags : Observer ,
× RELATED பரந்தூர் விமான நிலைய எதிர்ப்பு...