×

முன்மாதிரி தொகுதியாக மாற்றுவேன்: பிரபாகர் ராஜா வாக்குறுதி

சென்னை: விருகம்பாக்கம் தொகுதி திமுக வேட்பாளர் ஏ.எம்.வி.பிரபாகர் ராஜா தொகுதிக்கு உட்பட்ட கலைஞர் வடக்கு பகுதி 128அ மற்றும் 128 வட்டத்துக்கு உட்பட்ட பகுதிகளில் 31.76 கிலோ மீட்டர் நடந்தே வீடு வீடாக சென்று தீவிர  வாக்கு  சேகரித்தார். அப்போது அவர் தலைவர் கலைஞர் அரசின்  முந்தைய சாதனைகளையும், அதிமுக அரசின் வேதனைகளையும், திமுக ஆட்சிக்கு  வந்தால் என்ன செய்வோம் என்ற திமுக தேர்தல் அறிக்கையை விளக்கியும் உதயசூரியன்   சின்னத்திற்கு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
அப்போது பொதுமக்கள்  பாதாளசாக்கடை பிரச்னையை தீர்க்க வேண்டும். அரசு குடியிருப்பில் மக்கள்  சந்தித்து வரும் பிரச்னை, தெரு விளக்குகள் மற்றும் உயர் கோபுர மின்விளக்கு பிரச்னை குறித்து தெரிவித்தனர்.

மேலும் பூங்காக்களை  சீரமைக்க  வேண்டும், என்றனர். அதற்கு பதிலளித்த பிரபாகர் ராஜா, திமுக  ஆட்சிக்கு வந்தவுடன் பிரச்னைகள் அனைத்தும் உடனே தீர்க்கப்படும். மேலும்  மக்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு திட்டங்கள்  விருகம்பாக்கம் தொகுதிக்கு   கொண்டுவரப்படும். தமிழகத்திலேயே முன்மாதிரி தொகுதியாக விருகம்பாக்கத்தை  மாற்றுவேன் என்றார். பகுதி செயலாளர் மு.ராசா, தலைமை பொதுக்குழு உறுப்பினர் உ.துரைராஜ், தங்கராஜ், வட்ட  செயலாளர்  வீ.ஏ.ராஜா, கோவிந்தராஜ், தஞ்சை பாபு, மைக்கல், பழக்கடை பாஸ்கர், செல்லையா, கார்த்திகேயன், இளங்கோவன், பாஸ்கர், ரவி  சங்கரன், விஜயலட்சுமி, கோடீஸ்வரன், சக்தி சுந்தர், நிர்மல், வெற்றி, விக்கி உள்ளிட்ட திமுக நிர்வாகிகள்,  தோழமை கட்சியினர் உடன் இருந்தனர்.

Tags : Prabhakar Raja ,
× RELATED கழிவுநீர் கால்வாய் அமைக்க நடவடிக்கை: பிரபாகர் ராஜா வாக்குறுதி