×

கழிவுநீர் கால்வாய் அமைக்க நடவடிக்கை: பிரபாகர் ராஜா வாக்குறுதி

சென்னை:  விருகம்பாக்கம் சட்டமன்ற தொகுதியில் மத சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் திமுக சார்பாக போட்டியிடும் ஏ.வி.எம்.பிரபாகர் ராஜா கலைஞர் நகர் தெற்கு பகுதி 137 அ வட்டத்துக்கு உபட்ட பகுதிகளில் வீடு வீடாக நடந்தே சென்று வாக்கு சேகரித்தார். அப்போது, அங்கிருந்த மக்கள் அவருக்கு மலர் தூவியும், ஆரத்தி எடுத்தும் உற்சாகமாக வரவேற்றனர். அப்போது அவர் முந்தைய திமுக அரசின் சாதனைகளையும், திமுக ஆட்சிக்கு வந்தால் என்ன செய்வோம் என்ற திமுக தேர்தல் அறிக்கையை விளக்கி வாக்கு சேகரித்தார். கடந்த 10 ஆண்டுகால அதிமுக அரசின் வேதனைகளையும் மக்களிடம் விரிவாக எடுத்து கூறி உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.அப்போது அவர் பேசுகையில், “திமுகவின் தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டதுபோல் கழிவுநீர் பிரச்னையை தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும். மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான பட்டா பிரச்னை சரி செய்து தரப்படும். கழிவுநீர் கால்வாய் அமைத்து கொடுக்கப்படும். 24 மணி நேரமும் தூய்மையான குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும். குடிநீர் இணைப்பு இல்லாத வீடுகளுக்கு உடனடியாக இணைப்புகள் வழங்கப்படும்” என்று வாக்குறுதி அளித்தார். இதில் பகுதி செயலாளர் மு.ராசா தலைமை பொதுக்குழு உறுப்பினர் உ.துரைராஜ், மாவட்ட துணை செயலாளர் வாசுகி, வட்ட செயலாளர் பி.எஸ்.முருகேசன்,  புனிதகுமார், ஜெகதீசன், சதீஷ் கண்ணன், சமயம்  உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்….

The post கழிவுநீர் கால்வாய் அமைக்க நடவடிக்கை: பிரபாகர் ராஜா வாக்குறுதி appeared first on Dinakaran.

Tags : Prabhakar Raja ,Chennai ,AVM ,Prabhakar ,Raja Kalyan Nagar ,DMK ,Virugambakkam Assembly Constituency ,
× RELATED சென்னை கோயம்பேடு மேம்பாலத்தில் ஆண்...