×

கொடியம்பாளையம் தீவு கிராமத்தில் தூண்டில் வளைவு அமைக்கப்படும்

சீர்காழி, மார்ச் 19: சீர்காழி சட்டமன்ற தொகுதியில் திமுக வேட்பாளராக எம்.பன்னீர்செல்வம் போட்டியிடுகிறார். இந்நிலையில் நேற்று சீர்காழி அருகே கொடியம்பாளையம் தீவு கிராமத்தில் உதயசூரியன் சின்னத்துக்கு வாக்குகள் சேகரித்தார் அப்போது கொடியம்பாளையத்தில் கடல் அரிப்பை தடுக்க தூண்டில் வளைவு அமைத்து தர வேண்டும். புதிய சமுதாயக்கூடம் கட்டித்தர வேண்டும் என்று பன்னீர்செல்வத்திடம் பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர். அதற்கு உங்களது கோரிக்கையை நிறைவேற்றி தருவதாக வேட்பாளர் பன்னீர்செல்வம் வாக்குறுதி அளித்தார். திமுக வேட்பாளர் பன்னீர்செல்வம் வாக்கு சேகரிப்பின்போது முன்னாள் எம்எல்ஏ அருள்செல்வன், ஒன்றியக்குழு தலைவர்கள் கமலஜோதி, தேவேந்திரன், ஜெயபிரகாஷ் ஒன்றிய செயலாளர்கள் பிரபாகரன், சசிகுமார், ரவிக்குமார், மலர்விழி, திருமாவளவன், நகர செயலாளர் சுப்பராயன், தலைமை பொதுக்குழு உறுப்பினர் தமிழ்ச்செல்வன், மாவட்ட அவைத்தலைவர் சீனிவாசன், மாவட்ட தொண்டரணி அமைப்பாளர் முத்து குபேரன் சக்தி உடனிருந்தனர்.

Tags : Kodiyampalayam Island Village ,
× RELATED நோயாளிகள் எதிர்பார்ப்பு...