×

ஜேசிபி உரிமையாளரிடம் ₹92 ஆயிரம் பறிமுதல் வேட்டவலம் அருகே

வேட்டவலம், மார்ச் 18: வேட்டவலம் அருகே ஜேசிபி உரிமையாளர் கொண்டு சென்ற ₹92 ஆயிரம் ரொக்கத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.வேட்டவலம் அடுத்த கீரனூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் அருகே நேற்று கூடுதல் தேர்தல் பறக்கும் படை அலுவலர் பரிதிமால் கலைஞன் தலைமையில், தலைமை காவலர் சுப்பிரமணி மற்றும் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.அப்போது, அவ்வழியாக பைக்கில் வந்த சின்ன ஓலைப்பாடி கிராமத்தை சேர்ந்த ஜேசிபி உரிமையாளர் அங்குசாமி(37) என்பவரை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது, பைக்கின் முன் பகுதியில் ₹92 ஆயிரம் ரொக்கம் இருப்பது தெரியவந்தது.விசாரணையில், ஜேசிபி டயர் வாங்குவதற்காக பணம் கொண்டு செல்வதாக அங்குசாமி தெரிவித்தார். ஆனால், உரிய ஆவணம் இல்லாத காரணத்தால் அந்த பணத்தை பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பின்னர், அதனை உதவி தேர்தல் அலுவலர் தாசில்தார் வைதேகியிடம் ஒப்படைத்தனர்.

Tags : JCB ,
× RELATED நெல்லையில் ரூ.2 கோடி மதிப்பு கோயில் நிலம் மீட்பு..!!