×

வைகுண்டம் தொகுதி காங்.வேட்பாளர் ஊர்வசி அமிர்தராஜ் ஏரலில் வாக்குசேகரிப்பு

ஏரல், மார்ச் 18: வைகுண்டம் தொகுதி மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி தேர்தல் பணி அலுவலகம் திறப்பு விழா நேற்று மாலை ஏரலில் நடந்தது. இந்நிகழ்ச்சியில் காங்கிரஸ் வேட்பாளர் ஊர்வசி அமிர்தராஜ் கலந்து கொண்டு அலுவலகத்தை திறந்து வைத்தார். முன்னதாக அவருக்கு காங்கிரஸ், திமுக கூட்டணி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து அவர் ஏரல் காந்திசிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி ஏரல் மெயின் பஜார் வழியாக திறந்த வாகனத்தில் சென்று வியாபாரிகள் மற்றும் பொதுமக்களிடையே வாக்கு சேகரித்தார். அதன்பின் தேர்தல் பணி அலுவலகத்தை திறந்து வைத்தார்.   இந்நிகழ்ச்சியில் ஏரல் நகர காங்கிரஸ் தலைவர் பாக்கர்அலி, இளைஞர் காங்கிரஸ் மாவட்ட தலைவர் ஜெயசீலன் துரை, வைகுண்டம் கிழக்கு ஒன்றிய தலைவர் தாசன், வை. யூனியன் கவுன்சிலர் பாரத், மாவட்ட செயலாளர் சிவகளை பிச்சையா, பெருங்குளம் நகர தலைவர் மூக்காண்டி, மாவட்ட வர்த்தக பிரிவு தலைவர் டேவிட்பிரபாகரன், சிவத்தையாபுரம் சொரிமுத்துபிரதாபன் மற்றும் நிர்வாகிகள் அந்தோணிகாந்தி, காந்தி, உமரிக்காடு ஆனந்தமூர்த்தி, திமுக கட்சியை சேர்ந்த தலைமை செயற்குழு உறுப்பினர் பிரம்மசக்தி, வை. கிழக்கு ஒன்றிய செயலாளர் பிஜி ரவி, நகர செயலாளர்கள் ஏரல் பார்த்திபன், பெருங்குளம் சுடலை, வைகுண்டம் ஒன்றிய துணை செயலாளர் வாழவல்லான் மகராஜன், மாவட்ட வர்த்தக அணி அமைப்பாளர் சுந்தரராஜன், மாவட்ட விவசாய தொழிலாளர் அணி அமைப்பாளர் துரை,  மாவட்ட பொறியாளர் அணி அமைப்பாளர் ஆனந்த், மாவட்ட அணிகளின் துணை அமைப்பாளர்கள் ராயப்பன், பாலமுருகன், அனஸ், சுபமாரியப்பன், பிரபாகரன், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் ஜான்பாண்டியன், துணை அமைப்பாளர் ராஜேஸ், ஏரல் பேரூராட்சி முன்னாள் தலைவர் பாலகிருஷ்ணன், முன்னாள் துணை அமைப்பாளர் மணிவண்ணன், சூழவாய்க்கால் பஞ்சாயத்து தலைவர் வேங்கையன், மாவட்ட பிரதிநிதி செந்தில் ஆறுமுகம் மற்றும் நிர்வாகிகள் கொற்கைமாறன், மகாதேவன், வைத்தியர் துரைச்செல்வன், அம்மாள்தோப்பு ஜெயராஜ் உட்பட கூட்டணி கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர். முன்னதாக தூத்துக்குடி விமான நிலையத்தில் காங்கிரஸ் வேட்பாளர் ஊர்வசி அமிர்தராஜூக்கு திமுக, காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சிகள் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் அங்கிருந்து முக்காணி வந்த ஊர்வசி அமிர்தராஜ், அங்குள்ள காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதில் திரளான காங்கிரசார் மற்றும் கூட்டணி கட்சியினர் கலந்து கொண்டனர்.

இன்று வேட்புமனு தாக்கல்
வைகுண்டம் தொகுதி காங்கிரஸ் வேட்பாளா் ஊர்வசி அமிர்தராஜ் இன்று (வியாழன்) வேட்புமனு தாக்கல் செய்கிறார். காலை 9 மணிக்கு வைகுண்டம் ரெங்கராஜ பெருமாள் திருமணமண்டபத்தில் வைகுண்டம், கருங்குளம் ஒன்றிய மதச்சார்பற்ற முற்போக்கு ஊழியர் கூட்டத்தில் கலந்து கொள்கிறார். மதியம் 1 மணிக்கு வை. தாலுகா அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்கிறார். மாலை 3 மணிக்கு ஆழ்வார்கற்குளம் தேவர் சிலைக்கு மாலை அணிவித்தல், 3.15 மணிக்கு கொங்கராயக்குறிச்சி காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்தல், 3.45 மணிக்கு ஆறாம்பண்ணை பள்ளிவாசல் அருகில் முக்கிய பிரமுகர்களை சந்தித்தல், 4.15 மணிக்கு செய்துங்கநல்லூர் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்தல், 4.20 மணிக்கு கருங்குளம் வட்டார தேர்தல் பணி அலுவலகம் திறப்பு, 5 மணிக்கு புளியங்குளம் அம்பேத்கார் மற்றும் இம்மானுவேல் சேகரன் திருஉருவ படத்திற்கு மாலை அணிவித்தல், 5.15 மணிக்கு கால்வாய் தேவர் சிலைக்கு மாலை அணிவித்தல், 5.30 மணிக்கு வல்லகுளம் தேவர் படத்திற்கு மாலை அணிவித்தல், 5.45 மணிக்கு கீழாக்குளம் தேவர் படத்திற்கு மாலை அணிவித்தல், மாலை 6 மணிக்கு தெற்குகாரச்சேரி தேவர் படத்திற்கு மாலை அணிவித்தல், 6.15 மணிக்கு அரசகுளம் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்தல், இரவு 7.15 மணிக்கு சேரகுளம் கிருஷ்ணர் சிலைக்கு மாலை அணிவித்தல், 7.30 மணிக்கு ராமானுஜம்புதூர் கிருஷ்ணர் சிலைக்கு மாலை அணிவித்தல் நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார்.

Tags : Urvasi Amirtaraj Earl ,Awaikundam ,
× RELATED நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வைகுண்டத்தில் அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை