×

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வைகுண்டத்தில் அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை

வைகுண்டம், ஜன.28: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி வைகுண்டத்தில் அதிமுக பேரூர் கழகம் சார்பில் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்  நடந்தது.  கூட்டத்திற்கு முன்னாள் அமைச்சரும், தெற்கு மாவட்ட அதிமுக செயலாளருமான எஸ்.பி. சண்முகநாதன் தலைமை வகித்தார். மாவட்ட அவைத்தலைவர் திருப்பாற்கடல், வைகுண்டம் ஒன்றியச் செயலாளர் காசிராஜன், தொழிலதிபர் ஏ.பி. சண்முகசுந்தரம்,  முன்னிலை  வகித்தனர். இதில்வைகுண்டம் பேரூராட்சிக்கு உட்பட்ட 18 வார்டுகளிலும் அதிமுக வேட்பாளர்களை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

 கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களிடம் சண்முகநாதன் பேசுகையில் ‘‘ கொரோனா பேரிடர் காலத்தில் பொதுமக்களின் கஷ்டங்களை போக்கும் வகையில் கடந்த அதிமுக ஆட்சியில்   ரூ.2500 பொங்கல் உதவித்தொகையாக வழங்கப்பட்டது. இதே போல் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. எனவே, நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பெரும்பான்மையான இடங்களில் அதிமுக அமோக வெற்றி பெறும்’’ என்றார்.  கூட்டத்தில் அதிமுக நகரச் செயலாளர் காசிராஜன், முன்னாள் நகரச் செயலாளர் சண்முகசுந்தரம்,  கிளைச் செயலாளர் இருளப்பன், ஆப்பிள் ராமசாமி, வொர்க் ஷாப் ரவி, மகாராஜன், தொழிற்சங்க பொருளாளர் பொன்ராஜ்,  பாலன் மாரியப்பன்,  பொன்னுத்துரை, கூட்டுறவு வங்கி துணைத்தலைவர் எஸ்.டி.டி .ரவி,  திருமாலைகொழுந்து, சந்திரசேகர் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.

Tags : AIADMK ,Awaikundam ,
× RELATED செந்தில் பாலாஜி ஜாமீன் கேட்ட வழக்கில்...