சென்னை: சென்னை வேளச்சேரி மேம்பாலம் அருகே தனியார் பள்ளி பேருந்து திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நடு ரோட்டில் பேருந்து திடீரென தீப்பிடித்து மள மளவென பற்றி எரிந்ததால் அதிர்ச்சி அடைந்துள்ளனர். பேருந்தில் தீப்பிடித்தவுடன் பயணிகள் அனைவரும் உடனடியாக வெளியேற்றப்பட்டதால் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது.
