×

தேர்தல் செலவின பார்வையாளரிடம் பொதுமக்கள் புகார் அளிக்கலாம்

மதுரை, மார்ச் 15: மதுரை மாவட்ட வாக்காளர்கள், தேர்தல் மற்றும் வேட்பாளர்களின் செலவு தொடர்பான புகார்களை செலவின பார்வையாளரிடம் தெரிவிக்கலாம்.  தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் ஏப்.6ம் தேதி நடக்கிறது. இதையொட்டி வேட்பு மனு தாக்கல் நடந்து வருகிறது. இந்நிலையில், வேட்பாளர்களின் செலவு கணக்குகளை ஆய்வு செய்து சரிபார்க்க செலவின பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மதுரையில் உள்ள மேலூர், மதுரை கிழக்கு, சோழவந்தான், மதுரை வடக்கு ஆகிய தொகுதிகளின் செலவின பார்வையாளராக பர்தீப்குமார் (செல்நம்பர்-8925520181), மதுரை தெற்கு, மதுரை மத்தி ஆகிய தொகுதிகளுக்கு விநாயக் பாட் (செல் நம்பர்-8925520182), மதுரை மேற்கு, திருப்பரங்குன்றம் தொகுதிகளுக்கு  தெபேசிஸ் லாஹிரி (செல் நம்பர்-8925520183), திருமங்கலம் உசிலம்பட்டி தொகுதிகளுக்கு சமீர்குமார் ஜா (செல் நம்பர்-8925520184) ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் மதுரை அரசு விருந்தினர் மாளிகையில் தங்கியுள்ளனர்.
தேர்தல் மற்றும் வேட்பாளர்களின் செலவினங்கள் தொடர்பான புகார்களை, பொதுமக்கள் தேர்தல் செலவின பார்வையாளர்களின் செல்போன் எண்களுக்கு தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம்.

Tags :
× RELATED கடவூர், தோகைமலை பகுதியில் கம்பு சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம்