×

பாலமேட்டில் தேர்தல் விழிப்புணர்வு ஊர்வலம்

அலங்காநல்லூர், மார்ச் 11: பாலமேட்டில் வருவாய்த்துறை சார்பில் வாக்களிப்பதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. தேர்தல் நடத்தும் அலுவலர் ஜஸ்டின் ஜெயபால் தலைமை வகித்தார். வாடிப்பட்டி வட்டாட்சியர் பழனிகுமார், செயல் அலுவலர் தேவி, அலங்காநல்லூர் மண்டல துணை வட்டாட்சியர் மீனாட்சி, வருவாய் ஆய்வாளர் மீனாட்சி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் வருகின்ற ஏப்.6ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளதையொட்டி 100% வாக்குப்பதிவு குறித்தும், அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில் பேரூராட்சி அலுவலக வளாகத்தில் பாலமேடு வட்டார களஞ்சிய மகளிர் குழுவினர் சார்பில் வண்ண கோலம் போடப்பட்டு விழிப்புணர்வு செய்தனர். மேலும் நாட்டுப்புறக்கலை குழுவினர் மூலம் வாக்களிப்பதன் அவசியம், வாக்களிப்பது நமது உரிமை, எனது ஓட்டு விற்பனைக்கு அல்ல என்பது உள்ளிட்ட பதாகைகளை ஏந்தி ஊர்வலமாக சென்றனர்.

Tags : Election Awareness Rally ,Palamet ,
× RELATED தேர்தல் விழிப்புணர்வு பேரணி