உதகை: கஞ்சா செடிகளை வளர்த்து விற்பனை செய்து வந்த நேபாளத்தைச் சேர்ந்த தந்தை, மகன் கைது செய்யப்பட்டனர். முனி சவுத், கோகுல் சவுத் ஆகியோர் நேபாளத்தில் இருந்து விதைகளை வாங்கி வந்து உதகையில் வளர்த்துள்ளனர். முனி சவுத் வீட்டின் அருகே இருந்த 19 கிலோ எடை கொண்ட 6 கஞ்சா செடிகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
