பெரம்பலூர், ஏப். 6: பெரம்பலூர் பிரம்ம புரீஸ்வரர் கோவிலில் நேற்று முற்றோதல் நிகழ்ச்சி நடைபெற்றது. பெரம்பலூர் நகராட்சி துறையூர் சாலையில் அமைந்துள்ள அகிலாண்டேஸ்வரி சமேத பிரம்மபுரீஸ்வரர் கோவிலில் நேற்று (5ம்தேதி) காலை 10 மணிமுதல் மாலை 4 மணிவரை முற்றோதல் நிகழ்ச்சி நடைபெற்றது.
முன்னதாக அலங்காரம் மண்டபத்தில் அப்பர் திருவுருவப்படத்தை வைத்து சிறப்பு பூஜைகள் செய்து வழிபாட்டை ஆரம்பித்தனர். இதில் ஏராளமான தின, வார, வழிபாட்டுக் குழுவினர் மற்றும் சிவனடியார்கள் கலந்து கொண்டு தேவாரம், திருவாசகம், பெரியபுராணம். போன்ற பாடல்களை பாராயணம் செய்து ஈசனை மனம் உருகிப் பாடி மகிழ்ந்தனர்.
