×

ஏப்.29ல் தான் கருத்து கணிப்பு வெளியிட வேண்டும் புதுச்சேரி, கேரளம், அசாமுக்கு தேர்தல் ஆணையம் எச்சரிக்கை

புதுடெல்லி: தலைமை தேர்தல் ஆணையம் வெளியிட்ட அறிக்கை:புதுச்சேரி, கேரளா மற்றும் அசாம் மாநிலங்களில் அரும் 9ம் தேதி தேர்தல் நடந்து முடிந்தாலும், கருத்துக் கணிப்புகளை பத்திரிக்கை மற்றும் தொலைக்காட்சி செய்தி நிறுவனங்கள் வெளியிடக் கூடாது.

ஏனெனில் தமிழ்நாடு மற்றும் மேற்கு வங்கம் மாநில சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவும் அடுத்து நடைபெறவுள்ளதால், அதில் இந்த மூன்று மாநிலங்களின் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பு பாதிப்பை ஏற்படுத்தக் கூடும். அதன்படி மேற்குவங்க மாநிலத்திற்கு இறுதி கட்டமாக ஏப்ரல் 29ம் தேதியன்று வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்த பின்னர் அன்று மாலை 6.30 மணிக்கு மேல் கருத்துக் கணிப்பு முடிவுகளை வெளியிட்டுக் கொள்ளலாம்.

Tags : Election Commission ,Puducherry ,Kerala ,Assam ,New Delhi ,Chief Election Commission ,Tamil Nadu ,West Bengal… ,
× RELATED 10ம் வகுப்பு வரை மும்மொழிக் கொள்கையை...