காசியாபாத்: இந்தியாவின் பாதுகாப்பு முக்கியத்துவம் வாய்ந்த இடங்களை குறிப்பாக ராணுவ கண்டோன்மென்ட், காவல் நிலையங்களை கண்காணித்து ரகசிய தகவல்களை பாகிஸ்தானுக்கு ஒரு கும்பல் பகிர்ந்துள்ளது. இதுதொடர்பாக ஏற்கனவே 18 பேர் கைதான நிலையில், உ.பி மாநிலம் மதுராவில் ஷூட்டர், சமீர், சிவ்ராஜ் ஆகியோரை உ.பி போலீசார் கைது செய்துள்ளனர்.
