×

இருக்கன்குடி மாரியம்மன் கோயிலில் உண்டியல் காணிக்கை ரூ.77 லட்சம் கிடைத்தது

சாத்தூர், பிப். 17: சாத்தூர் அருகேயுள்ள பிரசித்தி பெற்ற இருக்கன்குடி மாரியம்மன் கோயிலில் ஒவ்வொரு மாதம் உண்டியல் திறக்கப்படுவது வழக்கம். இந்தநிலையில் நேற்று முன்தினம் 3 தற்காலிக உண்டியல். 10 நிரந்தர உண்டியல் திறக்கப்பட்டு. கோயிலின் மண்டபத்தில் பொருட்கள் கணக்கிடப்பட்டன. அதில் ரொக்கமாக ரூ.77 லட்சத்து 68 ஆயிரத்தி 223 காணிக்கையாக கிடைத்தது. மேலும் தங்கம் 195 கிராம், வெள்ளி 988 கிராம் கிடைத்தது. சாத்தூர், துலுக்கப்பட்டி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த ஓம்சக்தி பக்தர் குழு, ஐயப்ப சேவா சங்கம், கோயில் ஊழியர்கள் கலந்து கொண்டு காணிக்கையை எண்ணினர். இதில் இந்து அறநிலைய துறை விருதுநகர் கோயில்களின் உதவி ஆணையர் கணேசன், நகை சரிபார்ப்பு துணை ஆணையர் சிவலிங்கம் இருக்கன்குடி கோவில் ஆணையர் கருணாகரன், தலைமையில் பரம்பரை அறங்காவலர் ராமமூர்த்தி பூசாரி மற்றும் அறங்காவலர் குழுவினர், ஆய்வாளர்கள் பங்கேற்றனர்.

Tags : Irukkankudi Mariamman ,Rs ,
× RELATED தூத்துக்குடியில் மீன்கள் விலை கிடுகிடுவென உயர்வு..!!