×

அரகண்டநல்லூர் அருகே ரயில் மோதி வாலிபர் பலி

திருக்கோவிலூர், பிப். 16:விழுப்புரம் மாவட்டம் அரகண்டநல்லூர் அடுத்த டி. தேவனூரில் உள்ள தனியார் அரிசி ஆலையில் பீகார் மாநிலத்தை சேர்ந்த ஜனக்குமார் மகன் அனில்குமார் என்பவர் கடந்த 10 நாட்களாக கூலி வேலை செய்து வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு பணியை முடித்து விட்டு அருகே உள்ள ரயில்வே தண்டவாளத்தில் நடந்து சென்றதாக கூறப்படுகிறது. அப்போது, அவ்வழியே சென்ற ரயில் அவர் மீது மோதியதில் உடல் சிதறி அனில்குமார் இறந்ததாக கூறப்படுகிறது.

இதனையடுத்து நேற்று காலை அவ்வழியே சென்ற விவசாயிகள் இளைஞர் இறந்து கிடப்பதை கண்டு, விழுப்புரம் ரயில்வே போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில், ரயில்வே போலீசார் பிரேதத்தை கைப்பற்றி முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து சம்பவம் குறித்து விசாரித்து வருகின்றனர்.

பைக் மோதி பெண் படுகாயம்: திருக்கோவிலூர் அடுத்த தாசர்புரம் கிராமத்தை சேர்ந்தவர் செல்வராஜ் மனைவி சாந்தி(50). இவர் நேற்று திருக்கோவிலூர் அரசு மருத்துவமனை முன்பு நடந்து சென்றபோது, எதிரே வந்த பைக் மோதியதில் சாந்தி பலத்த காயமடைந்து, முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.  இதுகுறித்து திருக்கோவிலூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Tags : Arakandanalur ,train collision ,
× RELATED ரயில் மோதி புது மாப்பிள்ளை பலி