டெல்லி: தமிழ்நாட்டில் தேர்தல் நடைபெறும் ஏப்ரல் 23ம் தேதி ஊதியத்துடன் கூடிய விடுப்பு வழங்க தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. கேரளா, புதுச்சேரி, அசாம் ஆகிய இடங்களில் வரும் ஏப்ரல் 9ம் தேதியும், மேற்குவங்கத்தில் ஏப். 23, 29 தேதிகளிலும் விடுமுறை வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க தொழிலாளர் நலத்துறைக்கு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.
