கரூர்: தனியார் ரயில் வழித்தடத்தில் கல்லூரிப் பேருந்து மீது சரக்கு ரயில் மோதிய விபத்தில் காயமடைந்த 24 பேரில் 10 பேர் சிகிச்சை முடிந்து நேற்றிரவே வீடு திரும்பினர். தலையில் பலத்த காயம் அடைந்த மாணவர்களில் மூவர் மேல் சிகிச்சைக்காக கோவை மற்றும் கரூரில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். 11 மாணவர்கள் கரூர் அரசு மருத்துவக் கல்லூரியில் தொடர் சிகிச்சையில் உள்ளனர்.
