அசாம்: இந்திய விமானப் படையின் சுகோய்-30 ரக போர் விமானம் காணாமல் போனதால் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. அசாமில் இருந்து புறப்பட்ட சுகோய்-30 போர் விமானம் திடீரென ரேடாரில் இருந்து மறைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. விமானம் காணாமல் போனது குறித்து விமானப்படை குழு ஆய்வு செய்து வருகிறது என பாதுகாப்புத்துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.
