மும்பை: டி20 உலகக் கோப்பை 2வது அரையிறுதியில் இங்கிலாந்துக்கு 254 ரன்களை இந்தியா இலக்காக நிர்ணயித்தது. முதலில் பேட் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 253 ரன்கள் குவித்தது. இந்திய அணியில் தொடக்க வீரராக களமிறங்கிய சஞ்சு சாம்சன் 89 ரன்கள் எடுத்து அதிரடி ஆட்டம் ஆடினார். இந்திய அணியில் அதிகபட்சமாக ஷிவம் துபே 43, இஷான் கிஷன் 39, ஹர்திக் பாண்டியா 27 ரன்கள் எடுத்தனர். இங்கிலாந்து அணியில் வில் ஜாக்ஸ், அடில் ரஷீத் தலா 2, ஜோஃப்ரா ஆர்ச்சர் ஒரு விக்கெட் வீழ்த்தினர்.
