மதுரை வி.கரிசல்குளம் ராமுன்னி நகர் 2வது தெருவை சேர்ந்த கார்த்திகாதேவி (26). பைபாஸ் ரோட்டில் உள்ள மினரல் வாட்டர் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார். கடந்த 7ம் தேதி வேலைக்கு சென்றவர், வீடு திரும்பவில்லை. இதேபோல் அவனியாபுரம் பிரசன்னா காலனியை சேர்ந்த வைஷ்ணவி (22), பைபாஸ் ரோட்டில் உள்ள ஒரு பியூட்டி பார்லரில் வேலை பார்த்து வந்தார். இவர், கடந்த 8ம் தேதி வேலைக்கு செல்வதாக கூறி சென்றவர் வீடு திரும்பவில்லை. இதுகுறித்த புகார்களில் கூடல்புதூர், எஸ்எஸ்.காலனி போலீசார் விசாரிக்கின்றனர்.