அமெரிக்காவின் மிரட்டலுக்கு பணிய மாட்டோம் என்று ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸ் திட்டவட்டமாக கூறியுள்ளார். ஈரான் மீது தாக்குதல் நடத்த ஸ்பெயினில் உள்ள கூட்டு ராணுவ தளங்களை அமெரிக்க பயன்படுத்த ஸ்பெயின் அனுமதி மறுத்துள்ளது. ஸ்பெயின் அனுமதி மறுத்தால் அந்நாட்டு உடனான வர்த்தகம் முழுமையாக துண்டிக்கப்படும் என ட்ரம்ப் எச்சரித்திருந்தார்.
