காங்கயம்,பிப்.10:காங்கயம் அடுத்த சிவன்மலை முருகன் கோவில் தை பூச திருவிழாவை முன்னிட்டு அமைக்கப்பட்டுள்ள அன்னதான கூடங்கள், தற்காலிக உணவு கடைகள் ஆகியவற்றை ஆய்வு செய்ய உணவு பாதுகாப்பு துறை மாவட்ட நியமன அலுவலர் விஜயலலிதாம்பிகை தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் எட்டு பேர் கொண்ட குழுக்கள் அமைக்கப்பட்டது. இவர்கள் அன்னதான கூடத்தில் ஆய்வு மேற்கொண்டு, உணவு தயாரிக்க பயன்படுத்தப்படும் பொருட்கள் தரம், தயாரிக்கும் முறை குறித்து ஆய்வு செய்தனர்.
தற்காலிக உணவு கடைகளில் விற்பனை செய்யப்படும் உணவு பொருட்களின் தரம் குறித்து உணவு பாதுகாப்பு அலுவர்கள் மணி, தங்கவேல், சதீஸ்குமார், ராமசந்திரன், லியோ ஆண்ட்ரூஸ், விஜயகுமார் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர். இதில் சில கடைகளுக்கு அபராதம் விதிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.