×

மானூர் அருகே பூட்டிய வீட்டை திறந்து நகை, பணம் திருட்டு

மானூர்,  பிப். 9:   மானூர் அருகே கீழ செழியநல்லூரில் விவசாயி வீட்டை திறந்து 8 பவுன் நகை, ரூ.27 ஆயிரம் ரொக்கத்தை திருடி சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக வழக்கு பதிந்துள்ள போலீசார் மர்ம நபர்களை தேடி வருகின்றனர். மானூர் அருகே கீழ செழியநல்லூரைச் சேர்ந்தவர் மாரியப்பன். இவரது மனைவி பொன்செல்வி (22), நேற்று முன்தினம் காலை வீட்டில் உள்ள பீரோவை  பூட்டி சாவியை அதே அறையிலுள்ள மண்பானையில் வைத்தார். பின்னர் வீட்டை பூட்டி அதன்சாவியை வெளியே சமையல் அறையில் உள்ள நார்பெட்டியில் வைத்துவிட்டு வேலைக்குச் சென்றார். மாலை வீடு திரும்பியபோது பீரோவில் வைத்திருந்த ரூ.27 ஆயிரம், 8 பவுன் நகை திருடுபோனது தெரியவந்ததும் அதிர்ச்சியடைந்தார். புகாரின் பேரில் மானூர் எஸ்.ஐ. செய்யத் அகமத் நிசார்  வழக்குப்பதிந்து மர்ம நபர்களை தேடி வருகிறார்.

Tags : house ,Manor ,
× RELATED உதகை அருகே பைக்காரா படகு இல்லம் 15 நாட்கள் மூடல்