×

2வது நாளாக அரசு ஊழியர்கள் சாலை மறியல் 110 பேர் கைது புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்யக்கோரி

திருவண்ணாமலை, பிப்.4: திருவண்ணாமலையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, 2வது நாளாக மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர் சங்கத்தினர் 110 பேர் கைது செய்யப்பட்டனர். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில், தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் நேற்று முன்தினம் முதல் தொடர் மறியல் போராட்டம் நடத்தி வருகின்றனர். அதன்படி, திருவண்ணாமலையில் முதல் நாளன்று மறியலில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டு தனியார் மண்டபங்களில் அடைத்து வைக்கப்பட்டனர். பின்னர் விடுவிக்கப்பட்டனர். அதைத்தொடர்ந்து, 2வது நாளாக நேற்று திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகம் முன்பு மறியல் போராட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர் பார்த்திபன் தலைமை தாங்கினார்.

அப்போது, புதிய பென்ஷன் திட்டத்தை கைவிட வேண்டும், பழைய பென்ஷன் திட்டத்தை தொடர வேண்டும். அங்கன்வாடி மற்றும் சத்துணவு ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க ேவண்டும். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த அரசு ஊழியர்களின் குடும்பங்களுக்கு ₹50 லட்சம் இழப்பீடு வழங்க ேவண்டும் என்ற கோரிக்கைளை வலியுறுத்தி பேசினர். அதைத்தொடர்ந்து. மறியலில் ஈடுபட்ட 80 பெண்கள் உட்பட மொத்தம் 110 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த போராட்டத்தில் பெரும்பான்மையாக சத்துணவு பணியாளர்கள் பங்கேற்றனர்.

Tags : servants ,road blockade ,cancellation ,
× RELATED தேசிய குடிமை பணியாளர்கள் நாள் முதல்வர் வாழ்த்து