பழநி, பிப். 10: பழநி மின்வாரிய அலுவலகத்தில் இன்று (செவ்வாய்) காலை 11 மணி முதல் பகல் 1 மணி வரை மின் பயனீட்டாளர்களின் குறைதீர் முகாம் நடந்தது. இக்கூட்டத்தில் மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் நேரில் வந்து குறைகளை கேட்டறிய உள்ளார். எனவே, பழநி கோட்டத்தை சேர்ந்த மின் பயனீட்டாளர்கள் தங்களது மின் வாரியம் சார்ந்த குறைகளை தெரிவிக்க வேண்டும். இத்தகவலை மின்வாரிய செயற்பொறியாளர் சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.
