கேரளா: கேரளா முன்னாள் முதலமைச்சர் அச்சுதானந்தனுக்கு அறிவித்த பத்ம விபூஷண் விருதை அவரது குடும்பத்தினர் நிராகரித்தனர். பொது சேவை, தலைமைத்துவத்தில் சிறந்து விளங்கியதற்காக அச்சுதானந்தனுக்கு பத்ம விபூஷண் விருது அறிவிக்கப்பட்டது. உடல்நலக் குறைவு காரணமாக வி.எஸ்.அச்சுதானந்தன் கடந்த ஆண்டு ஜூலையில் காலமானார். குடியரசுத் தினத்தை ஒட்டி 2026ம் ஆண்டுக்கான பத்ம விபூஷண் விருது அச்சுதானந்தனுக்கு அறிவிக்கப்பட்டிருந்தது.
