திருவனந்தபுரம் : சபரிமலை தங்கத் திருட்டு வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் உன்னி கிருஷ்ணன் பொட்டிக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. கைது செய்து 90 நாட்கள் ஆனபோதும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாததால் கேரள நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. சபரிமலையில் துபார பாலகர் சிலைக்கு முலாம் பூச பெறப்பட்ட தங்கத் திருட்டு புகாரில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் உன்னி கிருஷ்ணன் பொட்டி உள்ளிட்டோர் ஏற்கனவே கைது செய்யப்பட்டனர்.
