டெல்லி : 76 ஆண்டுகளாக செயல்திறன் மிக்க அரசியலமைப்பு சட்டத்தை கொண்டுள்ள நாட்டின் குடிமகனாக இருப்பதில் பெருமைப்படுவதாக திமுக எம்.பி. திருச்சி சிவா தெரிவித்துள்ளார். மேலும் பேசிய அவர், “ஒவ்வொரு ஆண்டும் நாடாளுமன்றம் தொடங்கும்போது ஒன்றிய அரசின் கொள்கைகளை விளக்கி பேசுகிறார் குடியரசு தலைவர்.ஆனால் தமிழக ஆளுநர் ரவி மட்டும் பேரவையில் அவர் விருப்பத்துக்கு ஏற்ப செயல்படுகிறார்,” இவ்வாறு தெரிவித்தார்.
