×

திமுக சார்பில் பாகனேரியில் மாட்டுவண்டி பந்தயம்

சிவகங்கை, ஜன.30: காளையார்கோவில் அருகே பாகனேரியில் திமுக மாநில இளைஞரணி செயலாளர் உதயநிதிஸ்டாலின், அன்பில் மகேஷ் பொய்யாமொழி எம்எல்ஏ ஆகியோர் பிறந்த நாளை முன்னிட்டு மாட்டு வண்டி பந்தயம் நடந்தது.
நிகழ்ச்சிக்கு பொதுக்குழு உறுப்பினர் பிடிஆர்.முத்து தலைமை வகித்தார். இரு பிரிவாக நடத்தப்பட்ட இப்போட்டியில் பெரியமாடு பிரிவில் மதகுபட்டியை சேர்ந்த காளைகளும், சிறிய மாடு பிரிவில் நெற்புகப்பட்டியை சேர்ந்த காளைகளும் முதலிடம் பிடித்தன. முதல் மூன்று இடங்களை பிடித்த காளைகளுக்கும் மற்றும் சிறப்பு பரிசுகளும் வழங்கப்பட்டன. போட்டியை கீழக்கோட்டை சண்முகசுந்தரம், காளையார்கோவில் கிழக்கு ஒன்றிய செயலாளர் ஆரோக்கியசாமி தொடங்கி வைத்தனர். சிவகங்கை நகர் செயலாளர் துரைஆனந்த், ஒன்றிய செயலாளர்கள் முத்துராமலிங்கம், யோக.கிருஷ்ணகுமார்,

ஒன்றிய கவுன்சிலர் ராமலிங்கம், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் சுப.தமிழரசன், ஊராட்சி தலைவர்கள் கண்ணன், ஐயப்பன், நாட்டரசன்கோட்டை நகர் செயலாளர் ஜெயராமன், முன்னாள் பேரூராட்சி தலைவர் முருகானந்தம், இளைஞரணி செயலாளர் மோகன்ராஜ், கிளை செயலாளர்கள் சுப.கண்ணன், சண்முகம், சுகுமார், குருவாயூரப்பன், தங்கராஜ், பாலு, ராமராஜன், சுப்பிரமணியன், கர்ணன், நரசிங்கம், சேகர், சந்திரன், நெசவாளர் அணி மதகுபட்டி வேலு, பொறுப்புக்குழு உறுப்பினர் சுப.காசி, தகவல் தொழில்நுட்ப அணி சரவணன், அருள்அலெக்சாண்டர், பிடிஆர்ஓ.சுப்பிரமணியன், பிடிஆர்வி.திருஞானம், ராஜாமணி, பாலு, மணிகண்டன், வசந்த் மற்றும் ஏராளமான திமுகவினர், பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

Tags : Cattle race ,DMK ,
× RELATED திமுக சார்பில் நீர்மோர் வழங்கல்