கலசபாக்கம், ஜன.30: கலசபாக்கம் அருகே பூண்டி மகான் கோயிலில் பவுர்ணமி சிறப்பு பூஜை நடந்தது. கலசபாக்கம் அடுத்த பூண்டி கிராமத்தில் உள்ள பூண்டி மகான் கோயிலுக்கு, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து வழிபடுவது வழக்கம். இந்நிலையில், தை பூசத்தையொட்டி நேற்று முன்தினம் காலை, செய்யாற்றில் இருந்து புனிதநீர் கொண்டு வரப்பட்டு சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடந்தது. தொடர்ந்து, நள்ளிரவும் சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. பின்னர், சிறப்பு அலங்காரத்தில் பூண்டி மகான் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். சுற்றுப்புற கிராமங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.