- வட சென்னை
- வெப்ப மின் நிலையம்
- பொன்னேரி
- வடக்கு
- சென்னை அனல் மின் நிலையம்
- வெப்ப
- பவர்
- ஆலை
- திருவள்ளூர் மாவட்டம் அத்திப்பட்டு...
பொன்னேரி, ஜன. 28:வடசென்னை அனல் மின் நிலையத்தில் கொதிகலன் குழாயில் ஏற்பட்ட கசிவு காரணமாக மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்டம், அத்திப்பட்டில் உள்ள வட சென்னை அனல் மின் நிலையத்தில் நேற்று முதலாவது நிலையில் மூன்று அலகுகளில் தலா 210 மெகாவாட் மின் உற்பத்தியும், 2வது நிலையில் இரண்டு அலகுகளில் தலா 600 மெகாவாட் மின் உற்பத்தி என மொத்தம் 1830 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இதில், கொதிகலன் குழாயில் ஏற்பட்ட கசிவு காரணமாக 2வது நிலையின் 2வது அலகில் 600 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. கொதிகலன் பழுது நீக்கும் பணியில் மின் ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
