×

புதிய பிடிஓ பொறுப்பேற்பு

அணைக்கட்டு, ஜன. 29: வேலூர் மாவட்டம், அணைக்கட்டு பிடிஓவாக பி.இமயவரம்பன் பணியாற்றி வந்தார். இவர் பதவி உயர்வு பெற்று திருவண்ணாமலை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை உதவி திட்ட அலுவலராக பணியிட மாற்றம் ெசய்யப்பட்டார். இதையடுத்து பேரணாம்பட்டு (கி,ஊ) பிடிஓவாக பணியாற்றி வந்த கனகராஜ் அணைக்கட்டு (வ.ஊ) பிடிஓவாக பணியிட மாற்றம் செய்யப்பட்டார். அவர் நேற்று முன்தினம் அணைக்கட்டு பிடிஓ அலுவலகத்தில் பொறுப்பேற்றுக்கொண்டார். அவருக்கு சக ஊழியர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

Tags :
× RELATED சர்ச் பாதிரியார் அதிரடி கைது மதமாற்றம் செய்ய முயன்றதாக பெண் புகார்