×

ஆபரணத் தங்கத்தின் விலை மீண்டும் ரூ.1,040 உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,18,000க்கு விற்பனை!!

சென்னை: சென்னை ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ஒரே நாளில் ரூ.1,600 உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,18,000க்கு விற்பனையாகிறது. தங்கம் விலை சவரனுக்கு காலையில் ரூ.560 உயர்ந்த நிலையில் பிற்பகலில் ரூ.1,040 அதிகரித்துள்ளது. உலக நாடுகள் இடையிலான போர் பதற்றம், பொருளாதார மந்தநிலை, டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் வீழ்ச்சி போன்ற காரணங்களால் தங்கம் விலை தொடர்ந்து ஏறுமுகத்தில் இருந்து வருகிறது. இந்த வாரத்தின் தொடக்க நாளான திங்கட்கிழமை ஒரு பவுன் ரூ.1,07,600க்கு விற்பனை செய்யப்பட்டது. அடுத்த நாள் சவரனுக்கு ரூ.3,600 அதிகரித்து ரூ.1,11,200க்கு விற்கப்பட்டது. 21ம் தேதி காலை கிராமுக்கு ரூ.350ம் சவரனுக்கு ரூ.2800ம் உயர்ந்தது.

பிற்பகலில் மேலும் கிராமுக்கு ரூ.165, சவரனுக்கு ரூ.1320 என ஒரே நாளில் சவரனுக்கு ரூ.4,120 உயர்ந்து ரூ.1,15,320க்கு விற்பனை செய்யப்பட்டது. நேற்று முன்தினம் தங்கம் விலை சற்று சரிவை சந்தித்தது. இதன் காரணமாக ஒரு சவரன் விலை ரூ.1.14 லட்சத்திற்கு கீழ் சென்றது. நேற்று காலையில் ரூ.3,600 உயர்ந்த நிலையில் மாலையில் ரூ.800 குறைந்து ஒரு சவரன் ரூ.1,16,400க்கு விற்பனையானது.

இந்நிலையில் இன்று ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.560 உயர்ந்த நிலையில், பிற்பகலில் ரூ.1,040 அதிகரித்து ரூ.1,18, 000க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ஒரே நாளில் ரூ.200 உயர்ந்து ஒரு கிராம் ரூ.14,750க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி விலை கிராமுக்கு ஒரே நாளில் ரூ.20 உயர்ந்து ஒரு கிராம் ரூ.360க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை கிலோவுக்கு ஒரே நாளில் ரூ.20,000 உயர்ந்து ஒரு கிலோ ரூ.3.65 லட்சத்துக்கு விற்பனை செய்யப்படுகிறது.

Tags : Chennai ,Shavaran ,
× RELATED தமிழ்நாட்டில் 4 மாவட்டங்களில் இன்று...