×

தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர் நாள் கூட்டம் 314 மனுக்கள் பெறப்பட்டன

தஞ்சாவூர், ஜன.20: தஞ்சாவூர் மாவட்டத்தில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் பிரியங்கா பங்கஜம் தலைமையில் நடைபெற்றது. தஞ்சாவூர் மாவட்டம் ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் தலைமையில் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் இலவச வீட்டுமனைப் பட்டா, முதியோர் உதவித்தொகை. குடும்ப அட்டை பட்டா மாற்றம். கல்விக் கடன் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 314 மனுக்களை பொதுமக்கள் மாவட்ட கலெக்டரிடம் வழங்கினார்கள். இம்மனுக்கள் மீது உரிய நடவடிக்கைகள் உடனடியாக மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டார். இக்கூட்டத்தில், சமூக பாதுகாப்புத் திட்டம் தனித்துணை ஆட்சியர் சௌமியா மற்றும் அனைத்துத் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags : Public Grievance Redressal Day ,Thanjavur Collectorate ,Thanjavur ,Collector ,Priyanka Pankajam ,Thanjavur District Collectorate ,District Collector ,Priyanka Pankajam.… ,
× RELATED குடிநீருடன் கழிவுநீர் கலப்பு நகராட்சி அலுவலகம் முற்றுகை